அரசியல்
விரைவில் மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசு! – செயலில் இறங்குகிறார் பிரதமர் மஹிந்த
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என்று பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்பார்த்துள்ளார்.
அத்திருத்தப்பட்ட அரசியலமைப்பினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஊடகப்பிரிவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login