அரசியல்
அமைச்சுப் பதவிக்கு எனக்கு அழைப்பு வரவில்லை! – அரவிந்குமார் தெரிவிப்பு
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்குமாறு அரச தரப்பிலிருந்து இதுவரை தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார் தெரிவித்தார்.
நாளை புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்குமாருக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் தொடர்பில், அரவிந்த்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்தத் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதுவரை அரச தரப்பிலிருந்து இந்த விடயம் குறித்து, எவ்வித அழைப்புகளும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
You must be logged in to post a comment Login