அரசியல்
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் – தொழிற்சங்கங்கள் களத்தில்!!
ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி, வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன – என்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக சுகாதார அதிகாரிகளின் சம்மேளனத் தலைவர் ரவி குமுதேஷ் இந்த தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வெண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login