இலங்கை
ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் பரிதாப மரணம்!
ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்வெட்டுக் காரணமாகப் பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையால் 38 வயதான தாயும், அவரின் 9 வயதான மகளும், 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமியும், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.
You must be logged in to post a comment Login