அரசியல்
சாந்த பண்டார வீட்டின் முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!
அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட, சாந்த பண்டாரவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்சமாக பெற்றுக்கொண்ட இராஜாங்கப் பதவியை உடனடியாக இராஜினாமா செய்து, அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளாவிட்டால், சாந்த பண்டாரவுக்கு இனி வாக்களிக்க போவதில்லை என குருநாகல் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தும் சாந்த பண்டார வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login