இலங்கை
தந்தை, மகன் மர்மச் சாவு! – தண்ணீர்த் தொட்டியிலிருந்து சடலங்கள் மீட்பு
தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பைப் பார்வையிட வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன் பிற்பகல் 2 மணியாகியும் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்தபோது தண்ணீர்த் தொட்டியில் இருந்து குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த குடும்பஸ்தர் இறப்பர் தொழிற்சாலையின் நிர்வாகத் தர அதிகாரியாவார்.
தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அவர் அங்கு வந்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலைக்குத் தண்ணீர் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் காலி – அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login