Connect with us

அரசியல்

அரசுக்கு எதிரான பிரேரணை: இ.தொ.கா. நடுநிலையாம்!

Published

on

மருதுபாண்டி ராமேஸ்வரன்

அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசின் பங்காளியாகவிருந்து பின்னர் இராஜாங்க அமைச்சுப் பதவியை துறந்து வெளியேறிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி வருகின்ற நிலையிலேயே எதிர்க்கட்சியினர் அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு கட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருந்து விலகிய போதிலும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் நடுநிலையாகச் செயற்படப் போவதாக அறிவித்திருக்கின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இந்த அறிவிப்பானது மலையகத்தில் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.

அரசில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கடந்த வாரத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவியையும் இராஜிநாமா செய்திருந்தார். இந்நிலையில், நாட்டு மக்களும் அதேநேரம் இளைஞர்களும், யுவதிகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அவரது தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து பதவி விலகிச் செல்லுமாறு கூறி வருகின்ற நிலையில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்திருப்பது அரசுக்கு ஆதரவை வழங்குவதாக அமைந்திருக்கின்றது என மலையக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை 16, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...