அரசியல்
அழைப்பை நிராகரித்தன 11 கட்சிகளின் கூட்டணி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது, அரசியல்வாதிகளை வளைத்துபோட்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஜனாதிபதியின் முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்தே அவருடனான சந்திப்பை புறக்கணிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நேற்று அரசுக்கு ஆதரவு தெரிவித்து ,இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login