இலங்கை
டீசல் தாங்கியுடன் ரயில் இயந்திரம் மோதி விபத்து!
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் தாங்கியின் மீது, பின்னால் இருந்து வந்த ரயில் இயந்திரம் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, டீசல் தாங்கியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எஞ்சிய டீசல், தாங்கிகளில் ஏற்றப்பட்டது.
பேராதனைக்குக் கொண்டு செல்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளானது என ரம்புக்கனை ரயில் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login