இலங்கை
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி!
இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி, இன்று (11) நாட்டை வந்தடையவுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டுக்குக் கிடைக்கும் குறித்த தொகை அரிசி, சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச ஊடாக ஒரு கிலோகிராம் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி 110 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுகின்றன என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பால்மாவுக்கு மாத்திரம் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையவடையக்கூடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login