இலங்கை
நெடுந்தீவில் கடற்படையின் இரு படகுகள் மோதல்! – சிப்பாய் ஒருவர் மாயம்

யாழ்., நெடுந்தீவு கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படைச் சிப்பாய் காணாமல்போயுள்ளார்.
இந்திய திசையில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்கில் ஒரே சமயம் உள்நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 படகுகளை கடற்படையினரின் இரு படகுகள் விரட்டியுள்ளன. இதன்போது ஒரு கடத்தல் படகு பிடிப்பட்டபோதும் இரு படகுகள் தப்பியுள்ளன. இதேநேரம் கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின்போது படகில் இருந்த 4 கடற்படையினர் கடலில் தவறி வீழ்ந்துள்ளனர்.
இவ்வாறு கடலில் வீழ்ந்த 4 கடற்படையினரில் மூவர் மீட்கப்பட்டபோதும் ஒரு கடற்படைச் சிப்பாய் இதுவரை மீட்கப்படவில்லை. இதனால் கடற்படையினரின் தேடுதல் தொடர்கின்றது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login