அரசியல்
குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்! – விஜித ஹேரத்
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கும் நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்திவருகின்றனர். ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
எனவே, திமிர் பிடித்து செயற்படும் இந்த அரசுக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும். அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும். அத்துடன், குற்றப்பிரேரணையை முன்வைக்க நாம் தயார். ஏனெனில் அரசியல் தலைமைத்துவத்தையும் மாற்றியாக வேண்டும்.
அரசமைப்பு ரீதியில் இந்த ஜனாதிபதியையும், அரசையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
You must be logged in to post a comment Login