அரசியல்
IMF செல்கிறது நிதி அமைச்சர் தலைமையிலான குழு!
நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வொஷிங்டனுக்கு (IMF) செல்கிறது.
பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்முகமாகவே இந்த குழு வொஷிங்டனுக்கு செல்கிறது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவில், நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்களாக ஐவர் இடம்பெற்றுள்ளனர்.
You must be logged in to post a comment Login