அரசியல்
நிபந்தனைகளுக்கு இணங்கினாலே பதவியில் நீடிப்பேன்! – பிரதி சபாநாயகர் திட்டவட்டம்
” இரு நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதி சபாநாயகர் பதவியில் நீடிப்பேன்.” – என்று ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” ஏப்ரல் மாதம்வரைதான் இப்பதவியில் நீடிப்பேன் என்பது எனது முதல் நிபந்தனை. அதற்குள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
அந்த காலப்பகுதியில் பிரதி சபாநாயகருக்குரிய எந்தவொரு சிறப்புரிமையையும் அனுபவிக்க வேண்டாம். அவ்வாறு அனுபவித்தால் என்னிடம் இருந்து கட்டணம் அறிவிடுங்கள் என்பது இரண்டாவது நிபந்தனையாகும்.” என்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login