அரசியல்
சுற்றிவளைப்பு சம்பவங்களாலேயே அவசரகால சட்டம்! – தினேஷ் பதிலடி
ஜனாதிபதியின் வீடு சுற்றிவளைப்பு உட்பட நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்களால், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பாதுகாப்பு சபை கூடியது, அதன்போது நிலைமை மீளாய்வு செய்யப்பட்டது. அதற்கிணங்கவே அவசரகால சட்டம் மீளப்பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு உரிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார். இதில் குழப்பம் அடைய தேவையில்லை.” – என்றும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login