இலங்கை
மீண்டும் அதிகரித்தது சிமெந்து விலை!!
நாட்டில் சிமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இற்குமதி செய்யப்படும் 50 கிலோ சிமெந்து பொதியொன்றின் 500 ரூபாவாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெந்து பொதியின் விலை 450 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன விலை உயர்வுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் இரண்டாவது விலை உயர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login