இலங்கை
பத்து மணிநேரம் மின்வெட்டு!
இலங்கையில் நாளை புதன்கிழமை 10 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலமும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும் மின்வெட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login