அரசியல்
வயிறு மற்றும் வருமானம் பற்றி மட்டுமே மக்கள் சிந்திக்கின்றனர் ! – கூறுகிறார் மஹிந்தானந்த
” வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு அரசு தடுப்பூசிகளை வழங்கியது. அதனால்தான் இன்று எவ்வித அச்சுறுத்தலும் இன்றி போராட்டங்களை நடத்தமுடிகின்றது. இதற்கு காரணம் அரசுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். ஏப்ரல் முதலாம் திகதிக்குள் சமையல் எரிவாயு பிரச்சினை தீர்ந்துவிடும். அதன்பின்னர் எரிபொருள் பிரச்சினையும் தீரும். தற்போதைய நிலைமை என்பது தற்காலிகமானது, எனவே, வயிறு மற்றும் வருமானம் குறித்து மட்டும் மக்கள் சிந்திக்கக்கூடாது.” – என்றார்.
You must be logged in to post a comment Login