இலங்கை
‘நந்தி’ நினைவுப் பேருரை 30 இல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடாத்தப்படும் நினைவுப் பேருரைகளின் வரிசையில் சமுதாய மருத்துவத் துறையின் வாழ்நாள் பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீடாதிபதியும், ‘நந்தி’ என எழுத்துலகில் அறியப்பட்டவருமான பேராசிரியர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் நினைவுப் பேருரை எதிர்வரும் 30 ஆம் திகதி, புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள ஹூவர் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் “சமுதாயத்துடன் தொடர்புபட்ட மருத்துவக் கல்வி : எதிர்கால நோக்கும், சவால்களும்” என்ற தலைப்பில் மருத்துவ பீடாதிபதி வைத்தியர் இரா. சுரேந்திரகுமாரன் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
You must be logged in to post a comment Login