அரசியல்
பஸிலை வீழ்த்த முயற்சி! – நடக்காது என்கிறார் ரோஹித
” பஸில் ராஜபக்சவை வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர். அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது. அதற்கு நாம் இடமளிக்கவும்மாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பஸில் ராஜபக்சதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சியாகும். தற்போதுகூட மக்களை திரட்டும் சக்தி எம்மிடம் உள்ளது. பஸில் ராஜபக்ச சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். அது நடக்காது. 2015 இல் ராஜபக்சக்களை வீழ்த்த பார்த்தனர். அதுவும் முடியாமல் போனது. நிச்சயம் நாம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவோம்.
விமல், கம்மன்பில போன்றவர்களே அரசின் பயணத்தை குழப்பினர்.” – என்றார்.
You must be logged in to post a comment Login