அரசியல்
சரியும் ஆதரவு! – மேலும் 10 பேர் வெளியேற்றம்?
அரசுக்கான ஆதரவு நாளாந்தம் சரிந்துவரும் நிலையில், மேலும் 10 ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
எனினும், உடனடியாக எதிரணியில் இணையாமல், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படக்கூடும் என அறியமுடிகின்றது.
அனுரபிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, நிமல் லான்சா, பிரேமநாத் தொலவத்த உட்பட 10 ஆளுங்கட்சி உறுப்பினர்களே இந்த முடிவை எடுக்கவுள்ளனர்.
சந்திம வீரக்கொடி அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றார். அதிருப்தி காரணமான நிமல் லான்சா அண்மையில் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுசில் பிரேமஜயந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
You must be logged in to post a comment Login