அரசியல்
எம்முடன் இணைவதே சிறந்தது! – ஐ.தே.க வுக்கு அழைப்பு
” ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர்தான் இருக்கின்றார். அக் கட்சியால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, அக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” ஐக்கிய தேசியக் கட்சியென்பது எமது தாய்க்கட்சி. அக் கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன்தான் இருக்கின்றனர். அந்த கட்சியை நாம் மறக்கமாட்டோம். ஆனால் அந்த கட்சியின் அரசியல் கட்டமைப்பில் தற்போது ஒருவர்தான் இருக்கின்றார்.
எனவே, அந்த கட்டமைப்பால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எம்மால்தான் அது முடியும். எனவே, எம்முடன் கூட்டணி அமைப்பதுதான் ஆரோக்கியமான விடயமாக அமையும்.” – என்றார்.
You must be logged in to post a comment Login