அரசியல்
மக்களுக்காகவே மாநாட்டில் பங்கேற்பு! – ஐ.தே.க தெரிவிப்பு
” அரசை பாதுகாப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்காகவே எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், அதில் பங்கேற்கும் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ளது.
இது தொடர்பில் வினவியபோதே அகில விராஜ்காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.
” சர்வக்கட்சி மாநாட்டை நாம் புறக்கணித்தால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எதிரணிகள்மீது பழிசுமத்திவிட்டு தப்பிக்க முற்படலாம். அதேபோல கருத்துகளை முன்வைக்க சர்வக்கட்சி மாநாடே பொருத்தமான இடம்.
எனவேதான் நாட்டு மக்களின் நலன்கருதி, யோசனைகளை முன்வைப்பதற்காக எமது கட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login