இலங்கை
நாளை 197 கைதிகளுக்கு விடுதலை – ரஞ்சன் நிலை ?
ஜனாதிபதியினால் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (4) 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.
பெப்ரவரி 04 ஆம் திகதி வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு ஒரு வருடம் அல்லது அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி, ஏழு நாட்கள் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் பேச்சாளர் மேலும் கூறினார்.
You must be logged in to post a comment Login