இலங்கை
மீண்டும் செத்த மின்நிலையம்!!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் செயலிழந்த குறித்த மின் இயந்திரம் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு 270 மெகாவாட் மின்னை விநியோகிக்கும் வகையில் தேசிய மின் கட்டமைப்புடன் நேற்றைய தினம் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. ஆயினும் குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்த போதிலும் நாட்டில் திட்டமிட்ட மின்வெட்டுக்கு அவசியமில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login