இலங்கை
க.பொ.த பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!!!
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதியை பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஜனவரி 20ஆம் திகதி இதற்கான இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தின் ஊடாக உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login