இலங்கை
காணாமல்போன மகன் குறித்த தகவல் தெரியாமலேயே உயிரிழந்த தாய்!
காணாமல் போன தன் மகனைத் தேடி அலைந்து வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா- பூம்புகார் கல்மடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா ராமாயி (வயது 78) என்ற தாயே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் (வயது 38) கடந்த 2007ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து, வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத் தேடி கடந்த 1799 நாட்களாக வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் அவர், தனது மகன் குறித்த எவ்வித தகவலும் தெரிந்துகொள்ளாமல் இன்று (21) உயிரிழந்துள்ளார்.
You must be logged in to post a comment Login