இலங்கை
சீமெந்து தட்டுப்பாடு தீருமா?
நாட்டில் டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலையில், சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி 02 இலட்சம் சீமெந்துப் பொதிகளைத் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையும் என்றும், எனவே, எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாடு குறைவடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login