இலங்கை
ஒரு கண்ணை இழந்து அனுதாப வாக்கினால் சந்திரிக்கா வெற்றிபெற்றாரா?
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்த நிலையில், அனுதாப வாக்குகளால் வெற்றி பெற்றதைப் போல ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று அமைந்திருக்கிறது.
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாக ஈடுபட்டார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் வழங்கையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login