அரசியல்
பிற்போடப்பட்டது இந்திய தூதுவருடனான சந்திப்பு
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் இந்திய தூதுவரிடம் நேற்று கையளிக்கப்படவிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்கவிருந்தனர்.
எனினும், இந்திய தூதுவர் அவசரமாக டில்லி சென்றுவிட்டதால் இறுதி நேரத்தில் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. எனினும், 18 ஆம் திகதி ஆவணம் ஒப்படைக்கப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login