Connect with us

இலங்கை

கைக்கூலியான விக்னேஸ்வரன் நல்லவராகக் காட்டப்பட்டார்- கஜேந்திரன்

Published

on

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களை பொலிசார் தாக்கினர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே தவறு இழைத்தனர். அப்பாவி மக்கள் 11 பேர் படுகொலை செய்வதற்கு காரணமாக அமைந்தனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 47 வருடங்கள் கடந்த நிலையிலும் அது தொடர்பாக குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

அப்போதிருந்த மாநகர மேஜர் அல்பிரெட் துரையப்பா செய்த அந்த பெரும் துரோகம் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட கூடிய ஒரு நிலைமை தான் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

தமிழர்களை பொறுத்த வரையிலே தமிழர்கள் மீதான இந்த படுகொலைகளை மட்டுமல்ல.

வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா காவல்துறையினர் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் பாரியளவிலான போராட்டத்தில் ஈடுபட அதற்கான சூழலை உருவாக்கியது.

அந்த ஆயுத போராட்டம் பின்னர் சர்வதேச துணையோடு இருந்தாலும், அது மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கவில்லை ஒரு துரோகத்தனமான செயல்பாட்டிலேயே தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருப்பது என்பதுதான் மிகவும் துரதிஷ்டவசமானதாக இருக்கிறது.

இந்த செயல்பாடானது மீண்டும் தமிழர்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றது என்பது தொடர்பாக ஒரு அச்சம் ஏற்படுகின்றது.

தமிழர்களை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி எழுபத்தி நான்கு வருடங்களாக போராடி வந்திருக்கின்றனர்.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு பெற்ற கட்சிகள் ஒற்றையாட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தோம். அன்று எங்களுடைய கருத்தை பொய் என்று சொல்லி சொன்னார்கள் 2015ஆம் ஆண்டில் நாங்கள் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு உண்மையாக தொடங்கியது.

நீதியரசராக இருந்த கைக்கூலியான விக்னேஸ்வரன் அவர்களை தமிழர்களில் ஒருவராக காட்டி, தமிழ் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களும் கூட அவரை ஒரு நல்லவர் வல்லவர் என்று எங்களுடைய மக்களுக்கு காட்டி அவரை தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க துணை நின்று இருந்தார்கள்.

புலம்பெயர் தேசங்களில் இருந்தும் அவருடைய துரோகத்தனம் தெரிந்து கொண்டும் அவருக்குத் துணைநின்றனர்.

விக்னேஸ்வரன் கூட இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்த துரோகத்துக்கு துணை போயிருக்கின்றார்.

மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராசா விக்னேஸ்வரன் ஆகியவர்கள் கூட்டிணைந்து
அரசியலமைப்பு ஆவணம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள்.

இது படிப்படியாக வளர்ச்சி அடைந்து நாடாளுமன்றத்திலும் அந்த அரசியலமைப்பை ஆதரிப்பார்களாக இருந்தால் இந்த தீவில் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாக்கப்படுவார்கள்.

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு. தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும் என்று இந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இந்த மக்கள் மீது நாங்கள் ஆணையாக நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

#SrilankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...