இலங்கை
திவாலாகப்போகிறது இலங்கை: தி கார்டியன் அதிர்ச்சி செய்தி
பொருளாதாரம் தொடர்பாக சிந்திக்க வேண்டிய நிலைமையில் இன்று எமது தமிழ்த்தேசியம் இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று (08) யாழில் ஊடக சந்திப்பை நடாத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
டொலரின் கையிருப்பு என்பது மிகக் குறுகி வருகிறது.. பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான தி கார்டியன் பத்திரிகை, இலங்கையின் பொருளாதாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பாக இலங்கை இந்த வருடத்தில் திவாலாகும் என்று அதிர்ச்சியான விடயத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் தி கார்டியன் பத்திரிகையானது, இலங்கை தொடர்பாக வெளிப்படுத்தியிருந்தமை அனைத்துமே நிதர்சனமாகியுள்ளது.
தி கார்டியன் பத்திரிகையின் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அரிசி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது மிகவும் அதிருப்தி தரக்கூடியவிதமாக அமைந்துள்ளது.
இலங்கை பஞ்சத்துக்குள் தள்ளப்படும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான நிலை ஏற்படும் போது, வளங்கள் சரிசமமாகப் பங்கிடப்படுமென உறுதியாக நம்ப முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login