இலங்கை
03 கஜமுத்துக்களுடன் மடக்கிப்பிடிக்கப்பட்ட இருவர்!!
3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற போது, நேற்று இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்பாறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 3 கஜமுத்துக்களை கடத்திவந்த இருவரை கைது செய்ததுடன் கஜமுத்து மற்றும் கர் ஒன்றை மீட்டு அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
You must be logged in to post a comment Login