இலங்கை
12 – 15 வயது சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு!
12 வயது தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் குறித்த வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு சுகாதாரப் பிரிவினால் ஒரு டோஸ் தடுப்பூசி மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதுடன் இணைந்ததாக, பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத பாடசாலை ஆசிரியர்களுக்கும் அந்தந்த இடங்களில் தடுப்பூசியைப் பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் இதில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற முடியும்.
மேலும் வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலைகள் வழமைபோன்று செயற்படும், அத்துடன் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் பாடசாலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான சுகாதார வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாகவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login