இலங்கை
நாம் விழுந்தாலும் மீண்டெழுவோம்- ரோஹித நம்பிக்கை
நாட்டை பொருளாதார மட்டத்தில் கட்டியெழுப்புவதற்கான மூன்றாண்டு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்புத் தொடர்பில் பிரச்சினையொன்று உள்ளது. சுற்றுலாத்துறை ஊடாகவே எமக்கு அதிக டொலர்கள் கிடைத்தன. அத்துறையில் ஏற்பட்ட வீழச்சியும் இதற்கு பிரதான காரணம். தற்போது சுற்றுலாத்துறை புத்தெழுச்சி பெற்றுவருகின்றது.
நாம் விழ மாட்டோம். விழுந்தாலும் மீண்டெழுவோம். நாட்டை பொருளாதார ரீதியில் கட்யெழுப்புவதற்கான மூன்றாண்டு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.
You must be logged in to post a comment Login