இலங்கை
காணிகள் சுவீகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்- சஜீபன்
கடந்த சில மாதங்களாக வடமாகாணத்தில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருடைய தேவைகளுக்காகவும் காணிகள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு யாழ். வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் எஸ்.சஜீபன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
பிரதேச செயலங்களால் வழங்கப்பட்ட தனிநபர்களுக்குரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான ஆபத்திற்குள் தமிழர்கள், தமிழர்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login