இலங்கை
நீண்ட நாட்களுக்குப் பின் யாழ் வந்த மலேரியா!!!
யாழில், நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கே மலேரியா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 02 வாரங்களுக்கு முன் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரிய அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையானது மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் அ. ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login