இலங்கை
மண்ணெண்ணெய் அடுப்பை தேடி ஓடும் மக்கள்
நாட்டின் பல நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாற்றாக மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க ஆரம்பித்துள்ளனர்.
சில வர்த்தகர்கள் தாம் எண்ணிய விலையில் மண்ணெண்ணெய் அடுப்புகளை விற்பனை செய்கின்றனர் என நுகர்வோம் குற்றம்சாட்டியுள்ளனர்.
தம்மை மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, அதிக விலையில் மண்ணெண்ணெய் அடுப்புகளை விற்பனை செய்யும் வர்த்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login