இலங்கை
அவசரத்தால் நேர்ந்த விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி (படங்கள்)
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி கீழே பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.
இச்சம்பவமானது இன்று (12) முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன், சாரதி கீழே பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.
You must be logged in to post a comment Login