இலங்கை
ஒன்றரைக் கோடி பெறுமதியான கஜமுத்துகளுடன் மூவர் கைது!
வவுனியாவில் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்கள் நான்கை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்தபோது வவுனியாவிலுள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு முன்பாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து 4 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login