இலங்கை
அரிசிக்கு புதிய விலைகள்!
அரசாங்கத்தால் அரிசிக்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் 3 வகை அரிசிகளுக்குமான புதிய விலையை அறிவித்துள்ளது.
இதனை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 165 ரூபாவாவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளிடமிருந்து நாட்டரிசி கிலோ 62.50 ரூபாவுக்கும் சம்பா கிலோ 70 ரூபாவுக்கும் கீரி சம்பா கிலோ 80 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடிவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை நீக்கி அரிசி தட்டுப்பாட்டை நீக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login