இலங்கை
பிறந்தநாள் கொண்டாட்டம்!! – யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை!
பிறந்தநாள் கொண்டாட்டம்!! – யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை!
யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்
யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும், ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login