இலங்கை
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை – உர இறக்குமதிக்கு அனுமதி
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு இந்த இறக்குமதி செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதுவரை நெல் சாகுபடிக்கு மட்டுமே உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் இது நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login