இலங்கை
மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன
மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் இறால் குஞ்சுகள் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டன.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள குளங்களிலும் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login