இலங்கை
இவ்வாண்டு 160,000 கோடி நாட்டுக்கு இழப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை அரசு இந்த வருடம் 1 லட்த்து 60 ஆயிரம் கோடி ரூபா மொத்த வருமானம் இழந்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் நிதி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடு சட்டவரைபு தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வருவாய் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
நாங்கள் பெரும் சிரத்தையுடன் வெளிநாட்டு உதவிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றுக்கு சலுகைக் கடன் திட்டங்களுக்கு மாத்திரமே பணியாற்றவுள்ளோம்.
அத்துடன் இலங்கையின் அரச செலவுகள் வருவாயை விட அதிகரித்துள்ளதால் இதற்கு கொரோனாத் தொற்று முற்றிலும் காரணமாக அமையாது.
எனவே நெருக்கடி நிலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இல்லை. நிதி நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login