இலங்கை
சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!!
![சித்தங்கேணி கொலை வழக்கு - கைதான மூவரும் மறியலில்!! 1 Remanded GTN 1200x900 1](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2021/08/Remanded-GTN-1200x900-1.jpg?lossy=2&strip=1&webp=1)
சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியைச் சேர்ந்த தந்தையும் இரு மகன்களுமே சந்தேகநபர்களாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ. ஆனந்தராஜா இதன்போது உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment Login