இலங்கை
ஒருவர் மாத்திரமே வெளியே செல்லலாம் – சுகாதார வழிகாட்டி வெளியீடு!
ஒருவர் மாத்திரமே வெளியே செல்லலாம் – சுகாதார வழிகாட்டி வெளியீடு!
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு சுகாதார அமைச்சால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைக்காக இன்று முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்.
அனைத்து தசைப்பிடிப்பு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள் மற்றும் நீச்சல் தடாகங்கள் என்பவை மூடப்பட வேண்டும்.
இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் போன்றவையும் நடத்தப்படக்கூடாது.
அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதையும் நிறுத்த வேண்டும்.
வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த முடியாது. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login