இலங்கை
வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!
வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!
வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.
அதில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
You must be logged in to post a comment Login