4 46
இலங்கைசெய்திகள்

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

Share

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

சீனாவின்(china) செங்டு நகரில்  இலங்கை(sri lanka) துணைத் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின்(anura kumara dissanayake) சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.

“அந்த மாநிலத் தலைவர் எங்களுக்கு தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் செங்டு நகரில் வெளியுறவு அமைச்சகமாக ஒரு புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.”

ஜனாதிபதியின் சீனப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...