‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை என இன்று (நவம்பர் 30) அறிவித்துள்ளது.
இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நவம்பர் மாதத்தில் நடைமுறையில் இருந்த அதே விலைகள் டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்து நடைமுறைக்கு வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.